Wednesday, April 14, 2010

1061~1065 இரவச்சம் (பொருட்பால் -> ஒழிபியல்)

1061 கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு
           மிரவாமை கோடி யுறும்

நெஞ்சில்லுள்ளதை மறைக்காமற்காட்டும் கண்போல இருப்பதை மறைக்காமல் மனமகிழ்ந்து ஈகைசெய்பவரிடத்திற்கூட இரவல் கேட்காதது கொடிமடங்கு நல்லது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கரவாது - மறைக்காமல் ஒளிக்காமல்
உவந்து + ஈயும் - மனமகிழ்ந்து ஈகைசெய்யும்
கண் + அன்னார் + கண்ணும் - கண்போன்றவரிடத்திலும்
(அவர்கண்ணும் - அவரிடத்திலும்)
இரவாமை - இரவல் கேட்காதது
கோடி + உறும் - கோடிபெறும் கொடிமடங்கு நல்லது

கண் + அன்னார் - கண் + போன்றவர்.
அகத்தின்னழகு முகத்திற்தெரியும் -உள்ளத்திலிருப்பதை மறைக்காமல் காட்டும் கண் அதுபோல மறைக்காமல் ஈகைசெய்வோரை கண்போன்றவர் என்றுக்கூறுகிறார்
--------------------------------------------------------------------------------
அதுபோல - அதைப்போல
கண்போன்றவர் - கண்ணைப்போன்றவர்
அதை - "ஐ" வந்தால்தான் "ப்" வரும்
--------------------------------------------------------------------------------
1062 இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
            கெடுக உலகியற்றி யான்

பிறரிடங்கையேந்தி இவ்வுலகில் உயிர்வழவேண்டுமானால் அவ்வாறனவுலகை இயற்றியவன் அலைந்துதிரிந்து கேடுக
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
இரவல் - கையேந்துவது
இரந்தும் - பிறரிடங்கையேந்தி(யும்)
உயிர்வாழ்தல் + வேண்டின் - உயிர்வழவேண்டுமானால்
உலகு + இயற்றியான் - அவ்வாறனவுலகை இயற்றியவன் (படைத்தவன்)
பரந்துகெடுக - அலைந்து திரிந்து கேடுக
--------------------------------------------------------------------------------
இரவச்சம் - கையேந்தும் நிலையைக்கண்டு அஞ்சுவது


தனிவொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதியார்
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment