Monday, December 28, 2009

1000, 666

பண்புடைமை (பொருட்பால் -> ஒழிபியல்)

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்


கலந்தீமை யாற்றிரிந் தற்று - 1000

பாத்திரதிந்தீமையால் அதில்வூற்றிவைக்கப்படும் பால் கெட்டுவிடுவவதைப்போன்றது பண்பில்லாதவர்கள் பெற்றசெல்வம்


தெளிபொருள் விளக்கம்பண்பிலான் - பண்பில்லாதவன்

பெற்றபெருஞ்செல்வம் - ஈட்டியபெருஞ்செல்வம்

நன்பால் - நல்ல பால்

கலந்தீமையால் - கலன்+தீமையால் - பாத்திரதின்+தீமையால்

திரிந்தற்று - திரிந்துவிடுவதைப்போன்றது




வினைத்திட்பம் (பொருட்பால் -> அமைச்சியல்)

எண்ணிய வெண்ணியாங் கெய்துப எண்ணியார்


திண்ணிய ராகப் பெறின் - 666

ஒன்றையடையயெண்ணுபவர் அதற்குரிய செயலிலுறுதியுடையவராகயிருந்தால் அதை எண்ணியவாறே அடைவார்




தெளிபொருள் விளக்கம்எண்ணிய - எண்ணியதை

எண்ணியாங்கு - எண்ணியவாறு

எய்துப - (எய்துவர்) அடைவர்

எண்ணியார் - (அதையடைய) எண்ணுபவர்

திண்ணியராக - (அந்த செயலைச்செய்யகூடிய) திண்மையுடையவராக

பெறின் - இருந்தால்



Sunday, December 20, 2009

728, 1028

அவையஞ்சாமை (பொருட்பால் -> அமைச்சியல்)

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு


ணன்கு செலச்சொல்லா தார் - 728

அறிவுடையோர் நிறைந்தஅவையில் அவர்கள் மனத்தில்பதியும் அளவுக்கு கருத்துக்களைச்சொல்லயியலாவிடின் என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை




தெளிபொருள் விளக்கம்

பல்லவைகற்றும் - பலநூல்களைக்கற்றிருந்தாலும்

பயமிலரே - பயம் + இலரே நன்மைபயக்காதவரே விளைவிக்காதவரே

நல்லவையுள் - (படித்தோர் நிறைந்த) நல்ல அவையில்

நன்கு செல - நல்லவற்றை செல்லும்படியாக

சொல்லாதார் - சொல்லாதவர்

இங்கு 'பயம்' என்பது 'பயக்கும்' என்றபொருளில் இடைபெற்றுள்ளது 'அச்சம்' என்ற பொருளிலல்ல பயம் - வடமொழி அச்சம் - தமிழ்



குடிசெயல்வகை (பொருட்பால் -> ஒழிபியல்)

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும் - 1028

நாட்டைவளம்பெறசெய்பவர் நல்லநேரம் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார் அவர் சோர்வுற்று தேவையற்றவீண் மானத்தைக்கருதிக்கொண்டிருந்தால் ஆக்கம் ஏற்படாமல் கேடுதலே நடக்கும்



தெளிபொருள் விளக்கம்

குடிசெயல்வகை - குடியைவுருவாக்குதல் நாட்டைவளம்பெறசெய்தல்

குடிசெய்வார்க்கில்லை - குடிசெய்பவர்க்கு+இல்லை

பருவம் - நேரம் (நல்ல நேரம் பார்துதிருக்கமாட்டார் )

மடி - சோம்பல்

மடிசெய்து - சோர்வுற்று

மானங்கருத - தேவையற்ற வீண் மானத்தைக்கருதிக்கொண்டிருந்தால்

கெடும் - ஆக்கம் ஏற்படாமல் கேடுதலே நடக்கும்