அவையஞ்சாமை (பொருட்பால் -> அமைச்சியல்)
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
ணன்கு செலச்சொல்லா தார் - 728
அறிவுடையோர் நிறைந்தஅவையில் அவர்கள் மனத்தில்பதியும் அளவுக்கு கருத்துக்களைச்சொல்லயியலாவிடின் என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை
தெளிபொருள் விளக்கம்
பல்லவைகற்றும் - பலநூல்களைக்கற்றிருந்தாலும்
பயமிலரே - பயம் + இலரே நன்மைபயக்காதவரே விளைவிக்காதவரே
நல்லவையுள் - (படித்தோர் நிறைந்த) நல்ல அவையில்
நன்கு செல - நல்லவற்றை செல்லும்படியாக
சொல்லாதார் - சொல்லாதவர்
இங்கு 'பயம்' என்பது 'பயக்கும்' என்றபொருளில் இடைபெற்றுள்ளது 'அச்சம்' என்ற பொருளிலல்ல பயம் - வடமொழி அச்சம் - தமிழ்
குடிசெயல்வகை (பொருட்பால் -> ஒழிபியல்)
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும் - 1028
நாட்டைவளம்பெறசெய்பவர் நல்லநேரம் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார் அவர் சோர்வுற்று தேவையற்றவீண் மானத்தைக்கருதிக்கொண்டிருந்தால் ஆக்கம் ஏற்படாமல் கேடுதலே நடக்கும்
தெளிபொருள் விளக்கம்
குடிசெயல்வகை - குடியைவுருவாக்குதல் நாட்டைவளம்பெறசெய்தல்
குடிசெய்வார்க்கில்லை - குடிசெய்பவர்க்கு+இல்லை
பருவம் - நேரம் (நல்ல நேரம் பார்துதிருக்கமாட்டார் )
மடி - சோம்பல்
மடிசெய்து - சோர்வுற்று
மானங்கருத - தேவையற்ற வீண் மானத்தைக்கருதிக்கொண்டிருந்தால்
கெடும் - ஆக்கம் ஏற்படாமல் கேடுதலே நடக்கும்
Sunday, December 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment