Monday, February 22, 2010

225~230-1 ஈகை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

228  ஈ.த்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை
          வைத்திழக்கும் வன்க ணவர்

வறியவருக்கு எதுவுமளித்திடாமல் தம்முடைமைகளை தாமேவைத்து இழக்கும் ஈவிரக்கமற்றோர் பிறர்க்கு வழங்கிமகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ

--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஈ.த்து + உவக்கும் + இன்பம் - ஈகைசெய்து அதுகொடுக்கும்
அறியார்கொல் - அறியமாட்டாரோ
தாமுடைமை - தம்முடைமைகளை
வைத்து + இழக்கும் - தாமேவைத்து இழக்கும்
வன்கணவர் - வன்மையானவர்

--------------------------------------------------------------------------------
ஈவிரக்கம் - ஈவு + இரக்கம் - ஈகைசெய்யும் இரக்ககுணம்..???

--------------------------------------------------------------------------------
230  சாதலி னின்னாத தில்லை இனிததூஉம்
          ஈ.த லியையாக் கடை

சாவைவிட துன்பந்தரக்கூடியது வேறெதுவுமில்லை ஆனால் வறியவருக்கு ஒன்று கொடுக்க இயலாதநிலைமையில் அந்த சாவும் இனியதே
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

சாதலின் - சாவைவிட
இன்னாது - துன்பந்தரக்கூடியது கொடியது
இல்லை - வேறெதுவும் இல்லை
இனிது அதுவும் - அந்த சாவும் இனியதே
ஈ.தல் - வறியவருக்கு கொடுத்தல்
இயையாக்கடை - இயலாத நிலை
--------------------------------------------------------------------------------
கடை > கடமை > வழிமுறை
இயலாக் கடை - தன் வாழ்வின் வழி அவ்வாறாக ஆகிவிட்ட நிலை
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment