Monday, June 7, 2010

391~395 கல்வி(பொருட்பால் -> அரசியல்)

391  கற்க கசடறக் கற்பவை கற்றபின்
         நிற்க அதற்குத் தக

பிழையறகற்பிப்பவற்றை கற்கவேண்டும் கற்றபின் அதைப்பின்பற்றி நடக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கசடறக்கற்பவை என்பது ஓருசொல். பிழையில்லாமற்கற்பிக்கும் நூல்களைக்கற்க கற்றபின் நிற்க அதற்குத் தக
கற்க கசடற - க் இல்லாமலிருந்திருந்தால் ’பிழையில்லாமல் கற்க’ என்று பொருள்
--------------------------------------------------------------------------------

393  கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
          புண்ணுடையர் கல்லா தவர்

கற்றறிந்தவரே கண்ணுடையவர் எனப்படுபவர் கல்லாதவர் முகதில் இரண்டு புண்களையுடையவர்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கண் + உடையர் - கண்களை + உடையவர்
என்பவர் - எனப்படுபவர்
கற்றோர் - கற்றறிந்தவரே
கல்லாதவர் - கல்லாதவர்
முகத்து+ இரண்டு - முகதில் இரண்டு
புண் + உடையர் - புண்களை + உடையவர்
--------------------------------------------------------------------------------
படிக்கத்தேரிந்தவர் மற்றும் கற்றறிந்தவர் இருவரும் வேறு
--------------------------------------------------------------------------------
கண்களை + உடையவர் = கண்களையுடையவர் = கண்ணுடையவர்

No comments:

Post a Comment