Thursday, January 7, 2010

76~80 அன்புடைமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

78   அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
         வற்றன் மரந்தளிர்த் தற்று

மனத்தில் அன்பில்லாதவருடையவாழ்க்கை பாலைவனத்தில் பட்டமரம் தளிர்பது போன்றது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அன்பகத்தில்லா -அன்பு+அகத்தில் + இல்லா மனத்தில் அன்பில்லாத
வாழ்க்கை - அன்பில்லாதவுயிரின் வாழ்க்கை
வன்பாற்கண் - வல் + பால் + கண் வலிய வன்மையான பாலைவனத்திலே
வற்றல்+மரம் - வற்றியமரம்
தளிர்த்தற்று - தளிர்பது போன்றது

--------------------------------------------------------------------------------

80   அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
          என்புதோல் போர்த்த உடம்பு

அன்பின் வழிமுறையில் இயங்குவதே உயிர்வாழுந்நிலையாகும் அன்பிலாதவர்க்கு எலும்பை தோல் போர்த்திய வெற்றுடம்பேவாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அன்பின் வழியது - அன்பின்வழி நடப்பதென்பதே
உயிர்நிலை - உயிர்வாழ்தல் என்றாகும்
அஃதிலார்க்கு - அன்பிலாதவர்க்கு
என்புதோல் - எலும்பை தோல்
போர்த்த + உடம்பு - போர்த்தியவுடம்பு

No comments:

Post a Comment