ஒப்புரவு + அறிதல் - அறநூற்களிட்கூறப்படுவதுமட்டுமன்றி தாமேஅறிந்து நடந்துக்கொள்ளுந்தன்மைகள் ஒப்புரவறிதல் எனப்படுகிறது
212 தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
தன் உழைப்பீட்டிய செல்வமுழுவதும் தகுதிவுடையவருக்கு பயன்செய்தவதர்க்கேயாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
தாளாற்றி - உழைத்து
தந்த - (உழைப்புத்) தந்த
பொருளெல்லாம் - பொருள் முழுவதும்
தக்கார்க்கு - தகுந்தவர்க்கு
வேளாண்மை - பயன்
செய்தல் + பொருட்டு - செய்தவதர்க்காகவே
--------------------------------------------------------------------------------
216 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்
நீதிவுடையவனிடத்தில் செல்வஞ்சேருதல் ஊரினுள்ளே பயனுடையமரத்தில் பழம்பழுத்ததுப்போன்றது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
பயன்மரம் - பயன் தரும் மரம்
உள்ளூர் - ஊரினுள்ளே
பழுத்தது + அற்றால் - பழம்பழுத்ததுப்போன்றது
நயன் + உடையான் +கண் - நீதியறிந்தவனிடத்தில், நெறி உடையவனிடத்தில்
செல்வம் படின் - செல்வஞ்சேருதல்
--------------------------------------------------------------------------------
Sunday, March 7, 2010
216~220 ஒப்புரவறிதல் (அறத்துப்பால் -> இல்லறவியல்)
Labels:
212,
216,
அறத்துப்பால்,
இல்லறவியல்,
ஒப்புரவறிதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment