Monday, April 26, 2010

551~555 கொடுங்கோன்மை (பொருட்பால் -> அரசியல்)

553  நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
          நாடொறும் நாடு கெடும்

நாள்தொறும் நன்மைதீமைகளை ஆராய்ந்து செய்யவண்டியகடமைகளை செய்யாதமன்னன் நாள்தொறும் தன்நாட்டை இழந்துகொண்டே வருவான்
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

நாடொறும் - நாள் + தொறும்
நாடி - ஆராய்ந்து
முறை - செய்யவண்டியகடமைகளை
செய்யா மன்னவன் - செய்யாத மன்னன்
நாடொறும் - நாள் + தொறும்
நாடு கெடும் - நாட்டையிழப்பான்
--------------------------------------------------------------------------------
தினமும் தினம் தின் வடமொழிசார்ந்தசொல். நாள் ஞாயிறு - தமிழ்
--------------------------------------------------------------------------------
555  அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
        செல்வத்தைத் தேய்க்கும் படை - 555
(அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
 செல்வத்தைத் தேய்க்கும் படை - 555)

கொடுமையான ஆட்சியின் துன்பந்தாங்காமல் மக்கள்விடும் கண்ணீரே அம்மன்னன் ஈட்டிய செல்வம் புகழ் அனைத்தையும் அழிக்கும் பெருங்கருவி
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அல்லல் பட்டு - துன்பப்பட்டு
ஆற்றாது - பொறுக்காமல், தாங்காமல்
அழுத கண்ணீர் - மக்கள் விடும் கண்ணீர்
அன்றே - அல்லவா
செல்வத்தை - தலைவனின், மன்னனின் செல்வத்தை
தேய்க்கும் - குறைக்கும், அழிக்கும்
படை - பெரும் கருவி
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment