Wednesday, May 5, 2010

246~250 அருளுடைமை (அறத்துப்பால் - துறவறவியல்)

249  தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
           அருளாதான் செய்யு மறம்

அருளில்லதவன் அறச்செயல்செய்வான் என்பது தெளிவில்லாதவன் உண்மையை காணமுடியாததைப்போன்றது
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

தெருளாதான் - தெளிவில்லாதவன்
மெய்ப்பொருள் - உண்மையை
கண்டு + அற்றால் - காணமுடியாததைப்போலே
தேரின் - ஆராய்ந்துப்பார்த்தால் யோச்சிபாத்தாக்க
அருளாதான் - அருள்செய்யாதான்
செய்யும் அறம் - செய்யும் அறச்செயல்
--------------------------------------------------------------------------------
தேரின்
தேரின் - ஆராய்ந்துப்பார்த்தால்
தேரின் அருளாதான் - நல்லா தேர்தெடுத்த அருளிலாதவன்
இரண்டில் எதுசரியென்றுதெரியவில்லை
--------------------------------------------------------------------------------

250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
          மெலியார்மேல் செல்லு மிடத்து - 250

தன்னைவிடமெலிந்தவர் மேல் துன்புறுத்தசெல்லும்போது தன்னைவிடவலியவரின் முன் தான் அஞ்சிநிற்கும் நிலைமையை நினைக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வலியார்முன் - வலிமையானவர்முன் (தன்னைவிட)
தன்னை நினைக்க - தன்னை நினைத்துகொள்
தான் தன்னின் - தான் தன்னைவிட நாம் நம்மைவிட
மெலியார் - மெலிந்தவர்
மேல் செல்லுமிடத்து - மேல் (துன்புறுத்த)செல்லும்போது
--------------------------------------------------------------------------------
Tamil from Lorry
நினைக்க - நினை
முன்பெல்லாம் நம்மவூரு Lorryக்கு பின்னாடி 'நில்' ன்னு எழுதியிருக்கும் ஆனா இப்போ அத மாத்தி 'நிற்க' ன்னு எழுதுறாங்க.. அதுமாதிரி தான் நினைக்க - நினை.

ஆத்திச்சுடி கட்டளைசொல்லாக அமைத்து இருக்கும்
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment