Sunday, May 16, 2010

271~275 கூடாவொழுக்கம் (அறத்துப்பால் -> துறவறவியல்)

272  வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்நெஞ்சந்
          தானறி குற்றப் படின்

குற்றமென்றரிந்ததை தன்னெஞ்சு ஒத்து செய்தால் தவக்கோலம் பூண்ட வான்போலுயர்ந்த தோற்றம் என்னபயன்செய்யும் (மிக்கநல்லவர்போற்றதோற்றம் என்னபயன்செய்யும்)
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வானுயர் - வான்போலுயர்ந்த
தோற்றம் - தவக்கோலம் பூண்டதோற்றம்
எவன்செய்யும் - என்னபயன்செய்யும்
தானறி - தனக்கறிந்த
தன்நெஞ்சம் - தன்னெஞ்சொப்ப (தன்னெஞ்சு ஒப்ப)
குற்றப் படின் - குற்றஞ்செய்தால்
--------------------------------------------------------------------------------

273  வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
          புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று

மனத்தை அடக்கமுடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசுவொன்று புலித்தோலைப்போர்த்திக்கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்


வலியில் - வலிமையில்லாத
நிலைமையான் - இயல்புடையவன்
வல்லுருவம் - வலிமையாகதோன்றும்வுருவம் (வலிமையாக தோன்றும் உருவம்)
பெற்றம் - பெற்றிருப்பது
புலியின்றோல் - புலியின் + தோல்
போர்த்து - போர்த்திக்கொண்டு
மேய்ந்தற்று - மேய்வதைப்போன்றது
--------------------------------------------------------------------------------
வாய்கிழிய கத்திக்கோண்டுவந்தான் - 'க்'
கையில் கத்திகொண்டுவந்தான் - கத்தியை (கொண்டுவந்தான்) - 'யை' இல்லாமல் வரும்பொது 'க்' வராது

No comments:

Post a Comment